மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்

​காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.

News image
கோப்புப்படம்
Updated On :13 செப்டம்பர் 2021, 1:14 pm

DIN


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் கடந்த ஜூலை 19-ம் தேதி காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ரத்தம் கட்டியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட புகழ்பெற்ற மருத்துவர்களால் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. ஆனால், ஆஸ்கர் பெர்னாண்டஸ் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் பின்னர் தெரிவித்தன.

இந்த நிலையில், அவர் திங்கள்கிழமை காலமானார். அவரது உயிர் பிரியும்போது மனைவி, மகன் மற்றும் மகள் உடனிருந்தனர்.

உடுப்பியில் பிறந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் முதலில் 1980-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். உடுப்பி மக்களவைத் தொகுதியிலேயே அவர் 1980, 1984, 1989, 1991 மற்றும் 1996 என தொடர்ச்சியாக 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உயிரிழக்கும்போது மாநிலங்களவை உறுப்பினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நாடாளுமன்றச் செயலராக ஆஸ்கர் இருந்துள்ளார். நேரு குடும்பத்தினருக்கு நெருக்கமானவராகவே ஆஸ்கர் அறியப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.