எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

75 கோடி தடுப்பூசிகள்: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2021, 4:20 pm

DIN


இந்தியாவில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

நாட்டில் திங்கள்கிழமை மட்டும் மாலை 5.30 மணி வரை 67 லட்சம் (67,04,768) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, செலுத்தப்பட்ட மொத்தம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியைத் தாண்டியது. 

இதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாகத் தடுப்பூசி செலுத்தி வரும் இந்தியாவை உலக சுகாதார அமைப்பு பாராட்டுகிறது. முதல் 10 கோடி தடுப்பூசிகளை செலுத்த இந்தியா 85 நாள்களை எடுத்துக்கொண்டது. இதுவே 65 கோடி தடுப்பூசிகளிலிருந்து 75 கோடி தடுப்பூசிகள் என்ற எண்ணிக்கையை அடைய இந்தியா 13 நாள்களை மட்டுமே எடுத்துக்கொண்டது."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.