பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கோவேக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்?: சுகாதாரத்துறை விளக்கம்

இந்த மாதம் இறுதிக்குள் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால்

Updated On :14 செப்டம்பர் 2021, 10:26 am

இந்த மாதம் இறுதிக்குள் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதுகுறித்து நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசியது:

உலக சுகாதார அமைப்பினர் அறிவியலின் அடிப்படையில் முடிவெடுக்க காலவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களின் பயணத்திற்கு பல்வேறு நாடுகள் அனுமதி அளிக்காததால், உலக சுகாதார அமைப்பு ஒத்துழைப்பு முக்கியமானது.

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் பரிமாறப்பட்டு வருகிறது. மேலும், ஆவணங்களின் சரிபார்ப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளதால், இம்மாத இறுதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். உலக சுகாதார அமைப்பினர் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.