டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டடங்களை நாளை(செப்.16) திறந்து வைக்கிறார் மோடி

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)
Updated On :15 செப்டம்பர் 2021, 10:10 am

DIN

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.

தில்லி கஸ்தூரி பாய் மார்க் மற்றும் ஆப்ரிக்கா அவென்யு பகுதியில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என முப்படைகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைச்சக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களில் ஒரே நேரத்தில் 7,000 அதிகாரிகள் பணி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்திற்கான திறப்பு விழாவில் பங்குபெற்று பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். மேலும், பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோடி கலந்துரையாடவுள்ளார்.

இந்த நிகழ்வில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர், முப்படைகளின் தளபதிகள், ஆயுதப்படைகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.