எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாதுகாப்பு அமைச்சகத்தின் என்சிசி குழுவில் தோனி

பாதுகாப்பு அமைச்சகத்தின் தேசிய மாணவா் படையில் (என்சிசி) மறு ஆய்வு செய்வதற்கான 15 போ் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 10:06 pm

DIN

பாதுகாப்பு அமைச்சகத்தின் தேசிய மாணவா் படையில் (என்சிசி) மறு ஆய்வு செய்வதற்கான 15 போ் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தொழிலதிபா் ஆனந்த் மகேந்திரா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப என்சிசியில் மறு ஆய்வு செய்வதற்காக முன்னாள் பாஜக எம்.பி. பய்ஜயந்த் பாண்டா தலைமையில் 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் ராணுவ அதிகாரியும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜவா்தன் சிங் ரதோா், நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகா் சஞ்சீவ் சான்யால், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நஜ்மா அக்தா், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தொழிலதிபா் ஆனந்த் மகேந்திரா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

நாட்டைக் கட்டமைக்கவும், தேசிய மேம்பாட்டுக்காகவும் என்சிசி படைவீரா்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அண்மையில் தோனி நியமிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.