திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குஜராத் அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு; முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

கடந்த ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்த நிதின் படேல், ஆர். சி. ஃபால்டு, பூபேந்திர சிங் சூடாசாமா, கெளசிக் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 செப்டம்பர் 2021, 4:29 am

DIN

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேந்திய படேலின் அமைச்சரவை இன்று பொறுப்பேற்கவுள்ளது. முன்னதாக, அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்பதாக இருந்தது. ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பதில் சிக்கல் எழுந்த நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து குஜராத் முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவை செப்டம்பர் 16 ஆம் தேதி, மதியம் 1:30 மணிக்கு காந்தி நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்கவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவை கடந்த வாரம் ராஜிநாமா செய்தது. இதையடுத்து, அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சியை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பாஜக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக, 22 அமைச்சர்கள் நீக்கப்படவுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உத்தரவின்பேரில் அமைச்சரவை முழுவதுமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்த நிதின் படேல், ஆர். சி. ஃபால்டு, பூபேந்திர சிங் சூடாசாமா, கெளசிக் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.