ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கான்பூரில் இதுவரை 108 பேருக்கு டெங்கு

கான்பூரில் இதுவரை 108 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 11:02 am

DIN

கான்பூரில் இதுவரை 108 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே டெங்கு பாதிப்பும் மாநிலத்தில் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த நிலையில் கான்பூரில் நேற்று புதிதாக மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 84 பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதேசமயம், மாவட்டத்தில் டெங்குவால் இதுவரை உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என மாவட்ட சுகாதார அதிகாரி கூறியுள்ளார். இதனிடையே மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்துவித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.