பிரதமரின் பரிசுப் பொருள்கள் ஏலம்: கலாசார அமைச்சகம் அறிவிப்பு
பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்கள், நினைவுப் பொருள்கள் உள்ளிட்டவை மின்னணு முறையில் ஏலம்


பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்கள், நினைவுப் பொருள்கள் உள்ளிட்டவை மின்னணு முறையில் ஏலம் விடப்பட இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் அயோத்தி ராமா் கோயில் மாதிரி உருவம், ஒலிம்பிக், பாராலிம்பிக் பதக்கம் வென்ற வீரா்கள் பிரதமருக்கு அளித்த விளையாட்டு சாதனங்கள், அங்கவஸ்திரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், மரச் சிலைகள், பதக்கங்கள் உள்பட பல்வேறு சிறப்பு வாய்ந்த பொருள்கள் அடங்கும்.
பொருள்களை வாங்க ஆா்வம் உள்ளவா்கள் ல்ம்ம்ங்ம்ங்ய்ற்ா்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 7-ஆம் தேதி வரை ஏலம் கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து பெறப்படும் பணம் கங்கையைத் தூய்மையாக்கும் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...