திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள மம்தாவுக்கு அனுமதி மறுப்பு; வெளியுறவு அமைச்சகத்தின் செயலுக்கு காரணம் என்ன?

இந்தாண்டு அக்டோபர் மாதம், வாடிகனில் நடைபெறவுள்ள உலக அமைதி மாநாட்டில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கலந்து கொள்வதாக இருந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:14 am

DIN

உலக அமைதி மாநாட்டில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. வாடிகனில் இந்தாண்டு அக்டோபர் மாதம் உலக அமைதி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், போப் பிரான்சிஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

அன்னை தெரசாவை மையப்படுத்தி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள உள்ள அனைரும் உலக தலைவர்கள் என்றும் எனவே மாநில முதலமைச்சராக உள்ள மம்தாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியான நடவடிக்கை என்றும் சிலர் கூறியுள்ளனர்.

முன்னதாக, அமைதி மாநாட்டுக்கு அதிக அளவில் ஆட்களை அழைத்து வர வேண்டாம் என மம்தா பானர்ஜியிடம் இத்தாலி அரசு கோரிக்கை விடுத்திருந்தது. பின்னர், தொழில் நிறுவனங்களின் தலைவர்களை அழைத்த செல்ல மம்தா வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார். தற்போது, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதை கடுமையாக விமரிசித்துள்ள திரிணமூல் செய்தித்தொடர்பாளர் தேபாங்ஷு பட்டாச்சார்யா தேவ், "மம்தா ரோமுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னதாக, சீனா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

சர்வதேச உறவுகளையும் இந்திய நலனை கருத்தில் கொண்டு அந்த முடிவை ஏற்று கொண்டோம். ஆனால், இத்தாலியால் என்ன பிரச்சனை பிரதமர் மோடி அவர்களே? மேற்குவங்கத்திற்கும் உங்களுக்கும் என்ன தான் பிரச்னை?" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.