நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநிலங்களின் கையிருப்பில் 4.15 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 4.15 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :25 செப்டம்பர் 2021, 12:25 pm

DIN


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 4.15 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

இதுபற்றி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 82.57 கோடிக்கும் (82,57,88,115) மேலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 94 லட்சத்துக்கும் (94,37,525) மேலான தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுவதற்குத் தயாராக உள்ளன. மாநிலங்களின் கையிருப்பில் 4.15 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளன."

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 85 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு தரவுகளின் படி இன்று (சனிக்கிழமை) மட்டும் மாலை 5.45 மணி நிலவரப்படி மொத்தம் 62,98,470 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.