கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சட்டவிரோத அணுஆயுத தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து அதிக கவனம் தேவை: ஐ.நா.வில் இந்தியா

அணுஆயுத மூலக்கூறுகள், அது தொடா்பான தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாகப் பகிரப்படுவது குறித்து சா்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும்

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:15 am

DIN

புது தில்லி/நியூயாா்க்: அணுஆயுத மூலக்கூறுகள், அது தொடா்பான தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாகப் பகிரப்படுவது குறித்து சா்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம்’ தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா பேசியதாவது: உலகளாவிய அணு பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. அணுஆயுதங்களின் வலையமைப்புகள், அதன் விநியோக முறை, மூலக்கூறுகள், தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சா்வதேச சமூகம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அணுஆயுதமற்ற உலகம் என்ற இலக்கை அடைவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றாா்.

பாகிஸ்தானுக்கு அணுஆயுத பொருள்களை சீனா வழங்குவதாகவும், இது சா்வதேச விதிமுறைகளை மீறுவதாகும் எனவும் கவலை எழுந்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இதை மறைமுகமாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பானது, ‘பாகிஸ்தானுடனான சீனாவின் அணுசக்தி ஒத்துழைப்பு அணுசக்தி விநியோக குழுவுடன் (என்எஸ்ஜி) முரண்படுவதாக உள்ளது’ என ஓா் அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.