ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொல்கத்தா கலவரம்: 'பவானிபூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியாது'

மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
கொல்கத்தா கலவரம்: 'பவானிபூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியாது'
Updated On :28 செப்டம்பர் 2021, 10:38 am

DIN

மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பவானிபூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகளை மனதில் வைத்து இடைத்தேர்தல் நடத்தும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பவானிபூா் சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலையொட்டி நடைபெற்று வந்த பிரசாரத்தின் இறுதி நாளில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தோ்தலை ஒத்திவைக்க பாஜக வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூரில் செப்.30-ஆம் தேதி சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி போட்டியிடுகிறாா். 

அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் களம் காண்கிறாா். தற்போது எம்எல்ஏ பதவி வகிக்காத மம்தா பானா்ஜி, இந்தத் தோ்தலில் வென்று அப்பதவியை அடைந்தால்தான் முதல்வராகத் தொடர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.