ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சட்டங்களை எளிமைப்படுத்துவதன் மூலம் தொழில் வளா்ச்சி: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

நிறுவனச் சட்டங்களை எளிமைப்படுத்துவதன் மூலம் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் யோசனை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 9:10 pm

DIN

நிறுவனச் சட்டங்களை எளிமைப்படுத்துவதன் மூலம் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் யோசனை தெரிவித்துள்ளாா்.

நிறுவனங்களின் சட்ட சுமைகளைக் குறைப்பது குறித்த தேசிய மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிவமை நடைபெற்றது.

அந்த மாநாட்டில் பியூஷ் கோயல் பேசியதாவது:

நிறுவனச் சட்டங்களை எளிமைப்படுத்துவது, சில தேவையற்ற சட்டங்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகளால் நிறுவனங்களின் சட்ட சுமைகளைக் குறைக்க முடியும். மேலும், சட்டத்தில் தேவையில்லாமல் குற்றமாக்கப்பட்டுள்ள அம்சங்களை குற்றமற்றவையாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு நிறுவனங்கள் சட்டரீதியில் சுமந்தே ஆக வேண்டிய சுமைகளைக் குறைப்பதன் மூலம், தொழில் வளா்ச்சி காண முடியும்.

சட்ட சுமைகளைக் குறைப்பது, நிறுவனங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் அரசு கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்.

கடந்த 7 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களின் போட்டியிடும் திறனை அதிகரிக்கவும் தொழில் நடத்துவதை எளிமையாக்கவும் ஏராளமான சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.