தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பெங்களூரு: பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு கரோனா?

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த  60 பேர் பயிலும் தனியார் பள்ளியில் 2 மாணவிகளுக்கு நேற்று(செப்-28) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

News image

உலகம் முழுவதும் கரோனாவால் 23.18 கோடி பேர் பாதிப்பு

Updated On :29 செப்டம்பர் 2021, 5:43 am

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த  60 பேர் பயிலும் தனியார் பள்ளியில் 2 மாணவிகளுக்கு நேற்று(செப்-28) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் கர்நாடகத்தில் சில நாட்களுக்கு முன் மேல்நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கடுமையான கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் வகுப்பறைகள் பராமரிக்கப்பட்டாலும் நேற்று பெங்களூருவில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் 60 மாணவிகளுக்கு கரோனா தொற்று  பாதித்திருக்கலாம் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளியை மாவட்ட சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.

இதில் கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 44 மாணவிகளும் தமிழகத்தைச் சேர்ந்த 16 மாணவிகளும் அடங்குவர்.

கர்நாடகத்தில் கரோனா தொற்று மாணவர்களை பாதிக்கும் சூழலில் இன்னும் சில நாட்களில் 1 முதல் 10 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.