உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணை தகராறு காரணமாக மருமகளை மாமியார் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய்னா பாத்திமா. இவரது கணவர் முகமது அப்பாஸ். இருவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சாய்னா பாத்திமா, கடந்த 5 நாள்களுக்கு முன்புதான் மீண்டும் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சர்தாவல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் சாய்னா பாத்திமாவின் உடல், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வரதட்சிணை தொடர்பாக சாய்னா பாத்திமாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், மாமியார்தான் தன்னுடைய மகளை(மருமகளை) கொலை செய்ததாக சாய்னாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாய்னா பாத்திமாவின் தொண்டையில் காயம் இருந்ததாகவும், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரி எம்.பி.சிங் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் சமக? தீர்ப்பை மாற்றுவாரா நாட்டாமை?

கடைசி நாளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அஸ்ஸாம் தலைவர்கள்!

பிரதமர் மோடி 100% டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்! -ராகுல் காந்தி

ஈரான் போர் தற்காலிக நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

