
கோப்புப்படம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை எவ்வித பிரசாரத்தையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி வகுப்புவாத கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்தத் தடையை விதித்துள்ளது.