

பிரசாரம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை (திங்கள்கிழமை) தர்னா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 4 கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்றதையடுத்து, மீதமுள்ள 4 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 29 இடையே நடைபெறுகிறது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் சற்று முன்பு தடை விதித்தது.
இதுபற்றி சுட்டுரையில் பதிவிட்டுள்ள மம்தா, தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பு விரோத முடிவை எதிர்த்து நாளை (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தர்னாவில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.