எதிர்க்கட்சிகள் அமளி: பிற்பகல் 3.30 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 
பிற்பகல் 3.30 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு
பிற்பகல் 3.30 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 9 நாளாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அவையின் மாண்பை குலைக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டாம் என்று இரு அவைத் தலைவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

மாநிலங்களவை ஒத்திவைப்பதற்கு முன்னதாக உள்நாட்டு கப்பல் மசோதா 2021 நிறைவேற்றப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com