ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.
இது தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகள் குறித்து ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படவுள்ளது. இதற்கான கோப்புகள் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட குழு அமைக்க ஒத்துழைப்பு வழங்க துணை நிலை ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.