மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அஸ்ட்ராஜெனெகாவைவிட ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவு எனத் தகவல்

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 12:34 pm

DIN

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகையில், "தொடக்கத்தில், கரோனாவுக்கு எதிராக ஃபைசர்-பயோஎன்டெக்கின் இரண்டு தவணை தடுப்பூசி நல்ல செயல்திறனை வெளிப்படுத்துகிறது. ஆனால், அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி பல மாதங்கள் கழித்து பார்த்தால், தீவிரத்தன்மை கொண்ட வைரஸ்கள் மற்றும் அறிகுறிகள் தென்படும் நோய்யுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டு 4, 5 மாதங்களில் இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறனும் ஒரே மாதிரியாக உள்ளது. நீண்ட கால ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது" என்றார்.

பிரிட்டன் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மற்ற விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு இது இன்னும் அனுப்பப்படவில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் இயக்கவியல் அஸ்ட்ராஜெனெகாவிலும் ஃபைசரிலும் பெரும் வேறுபாடு அடைகிறது என நஃபீல்ட் கல்லூரி மருத்துவ துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 58 சதவிகித மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகும், பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து கவலை எழுப்பப்பட்ட நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அங்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றவர்களை காட்டிலும் கரோனா வைரஸ் நோயால் பாதிப்படைந்தவருக்கு தடுப்பூசியால் கிடைக்கும் பாதுகாப்பு அதிகரித்துள்ளது என ஆக்ஸ்போர்டு ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.