4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேலையின்மை பதிவு பிரசாரம்: உத்தரகண்ட் காங்கிரஸ் சார்பில் நாளை தொடக்கம்

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் வேலையின்மை பதிவு பிரசாரம் நாளை(ஆக.20) தொடங்குகிறது. 

News image

கோப்புப்படம்

Updated On :19 ஆகஸ்ட் 2021, 11:27 am

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் வேலையின்மை பதிவு பிரசாரம் நாளை(ஆக.20) தொடங்குகிறது. 

உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் இதுகுறித்து கூறுகையில், 

நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

நாளை(ஆக.20) முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, உத்தரகண்ட் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநிலத்தில் வேலையின்மை பதிவு பிரசாரம் தொடங்குகிறது. 

வேலையில்லாதவரிகளையும் இளைஞர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த பிரசாரம் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்த பிரசாரத்தை காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், மாநிலத் தலைவர் கணேஷ் கொடியால், எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் மற்றும் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

முன்னதாக, நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன் இந்த பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கி பல்வேறு பகுதிகளில்  நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.