இந்தியா
நாடாளுமன்ற வளாகத்தில் ராஜீவ் காந்தி படத்திற்கு மரியாதை
நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படத்திற்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படத்திற்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தியில் 77வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.