மத்தியப் பிரதேசத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியதால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் நேரிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் மர்ம வைரஸ் காய்ச்சலால் ஏராளமான சிறுவர், சிறுமியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால், எஞ்சிய சிறுவர், சிறுமிகளை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய மாவட்ட தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி அனிதா கூறியதாவது, அதிகமாக உள்ள நோயாளிகளை மற்ற மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தியுள்ளேன். அவை அடுத்த ஓரிரு நாள்களில் நடைபெறும் என்று கூறினார்.