கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,213 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,206 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 25 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,43,463 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,86,906 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,231 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் 2ம் நாளாக 30ஆயிரத்துக்கு மேல் கரோனா பாதிப்பு
இன்றைய நிலவரப்படி 19,300 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.