இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

6,7,8-ம் வகுப்புகளுக்கு செப். 6 முதல் பள்ளிகள் திறப்பு: கர்நாடகம்

கர்நாடகத்தில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். 

News image
6,7,8-ம் வகுப்புகளுக்கு செப். 6 முதல் பள்ளிகள் திறப்பு: கர்நாடகம்
Updated On :30 ஆகஸ்ட் 2021, 4:24 pm

DIN

கர்நாடகத்தில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். 

கடந்த 23-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

எனினும் தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ள தாலுகாக்களில் மட்டுமே இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, கேரள எல்லைப்பகுதியுடன் உள்ள 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று விகிதம் 2 சதவிகிதத்திற்கு கீழ் உள்ள தாலுகாக்களில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 

வகுப்புகளில் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும். ஒரு வாரத்தில் ஐந்து நாள்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.