ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவரை பாதுகாப்புப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உடனடியாக பாதுகாப்புப் படையினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது புட்கம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.