தேசிய நெடுஞ்சாலை 334-பி பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.
இதையும் படிக்க- வரும் 18-ல் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்
என்எச்-334-பி 93% பணிகளுடன் நிறைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 3 மாதங்களுக்கு முன்பே 2022 ஜனவரியில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உ.பி/ஹரியாணா எல்லையில் (பாக்பத்) தொடங்கும் என்எச்-334-பி, ரோகனில் முடிவடைகிறது. இது பல சாலைகளை இணைக்கிறது. சண்டீகர், தில்லி பயணிகளுக்கும் இது நேரடி இணைப்பை வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.