சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

தேசிய நெடுஞ்சாலை 334-பி பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 

தேசிய நெடுஞ்சாலை 334-பி பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :12 டிசம்பர் 2021, 2:05 pm

DIN

தேசிய நெடுஞ்சாலை 334-பி பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. 

என்எச்-334-பி 93% பணிகளுடன் நிறைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 3 மாதங்களுக்கு முன்பே 2022 ஜனவரியில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உ.பி/ஹரியாணா எல்லையில் (பாக்பத்) தொடங்கும் என்எச்-334-பி, ரோகனில் முடிவடைகிறது. இது பல சாலைகளை இணைக்கிறது. சண்டீகர், தில்லி பயணிகளுக்கும் இது நேரடி இணைப்பை வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.