சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்றுவதே பாஜகவின் நோக்கம்’: மல்லிகார்ஜுன கார்கே

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மசோதாக்களை தாக்கல் செய்வதே பாஜகவின் நோக்கம் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே(கோப்புப்படம்)
Updated On :22 டிசம்பர் 2021, 10:40 am

DIN

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மசோதாக்களை தாக்கல் செய்வதே பாஜகவின் நோக்கம் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் நடைபெற்று வந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே இரு அவைகளிலும் முடிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் போதே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மழைக்கால கூட்டத்தொடரில் நடந்த சம்பவத்திற்காக குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து நீக்குவது முற்றிலும் தவறான செயல். வேலையின்மை, பண வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க திட்டமிட்டு இருந்தோம்.

மசோதாக்களை விவாதமின்றி உடனடியாக நிறைவேற்றுவதே பாஜகவின் எண்ணமாக இருக்கின்றது. அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதாக்கள் மீது வாக்கெடுப்பை விரும்பாத அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை குறைக்க முடிவு செய்தனர். அதனால்தான் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.