மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குளிர்காலக் கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் முன்கூட்டியே நிறைவு

மக்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா புதன்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :22 டிசம்பர் 2021, 10:31 am

DIN

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் புதன்கிழமை அறிவித்தனர்.

குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம், லக்கிம்பூர் விவகாரம், தேர்தல் திருத்த மசோதா, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்னைகளை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியவுடன் காலவரையின்றி அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர்கள் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து நாளை முடிய வேண்டிய கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.

அதேபோல், மாநிலங்களவையும் நிறைவு பெறுவதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் தேர்தல் திருத்த மசோதா, வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.