இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 7,286 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 387 பேர் பலியாகியுள்ள நிலையில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,79,520 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 3,42,23,263 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 77,032 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 141 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு