நாட்டில் 30,093 பேருக்கு கரோனா; 45,254 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,093 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 374 பேர் பலியாகினர்.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,093 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 374 பேர் பலியாகினர்.
கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு நாட்டில் இன்று குறைந்தபட்ச பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இறுதியாக கடந்த மார்ச் 30ஆம் தேதி நாட்டில் 354 பர் கரோனாவுக்கு பலியாகினர்.
அதே வேளையில் 45,254 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,03,53,710 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இன்று காலை நிலவரப்படி நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,06,130 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,11,74,322 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 4,14,482 ஆகவும் உள்ளது.
தடுப்பூசி:
நாட்டில் இதுவரை மொத்தம் 41.18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...