தில்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம்.
இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளது.