மக்களவையில் அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கிய நாள் முதலே பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக காகிதத்தை கிழித்தெறித்தனர்.
இதையும் படிக்க | பள்ளிகள் திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், நேற்று மாலை எதிர்க்கட்சி எம்.பிக்களின் செயலுக்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், சபையின் சில உறுப்பினர்கள் நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரான சம்பவங்களை தொடர்ந்து செய்கிறார்கள்.
சபையின் மாண்பை குறைக்கும் விதமாகவும் களங்கப்படுத்தும் விதமாகவும் தொடர்ந்து நடந்துகொண்டால் உறுப்பினர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அவையை ஒத்திவைப்பதற்கு முன் ஓம் பிர்லா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி மாநில அதிமுக ஆதரவு
திருநங்கையை அவதூறாக பேசியவா் மீது வழக்கு
சட்ட விரோத மது விற்பனை: கடலூா் மாவட்டத்தில் 24 போ் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

