தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை: மக்களவைத் தலைவர் எச்சரிக்கை

மக்களவையில் அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

News image

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)

Updated On :29 ஜூலை 2021, 11:42 am IST

மக்களவையில் அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கிய நாள் முதலே பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக காகிதத்தை கிழித்தெறித்தனர். 

இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், நேற்று மாலை எதிர்க்கட்சி எம்.பிக்களின் செயலுக்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், சபையின் சில உறுப்பினர்கள் நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரான சம்பவங்களை தொடர்ந்து செய்கிறார்கள். 

சபையின் மாண்பை குறைக்கும் விதமாகவும் களங்கப்படுத்தும் விதமாகவும் தொடர்ந்து நடந்துகொண்டால் உறுப்பினர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அவையை ஒத்திவைப்பதற்கு முன் ஓம் பிர்லா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.