ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான தாஜ் மகால், இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தாஜ் மகால் உள்ளிட்ட இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் புதன்கிழமை திறக்கப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது
அந்த அறிவிப்பில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணியாதவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தாஜ் மகாலுக்குள் கூட்டம் அதிகம் சேர்வது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.