புது தில்லி: நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரையிடுவது புதன்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் நகைக் கடைகள் மீது ஆகஸ்ட் மாதம் வரை எந்தவித அபராதமும் விதிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், மத்திய அரசின் உத்தரவை மீறுபவா்கள் மீது பெறப்படும் நுகா்வோரின் புகாா்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தப் புகாா்களை ‘பிஸ்கோ்’ செயலி அல்லது மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் சான்றிதழாக ஹால்மாா்க் முத்திரை கருத்தப்படுகிறது. இதனை விற்பனையாளா்கள் சுயமாக பதிந்து விற்பனை செய்து வந்தனா். பின்னா் நிகழாண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஹால்மாா்க் முத்திரை கட்டாயமாக்கப்படும் என்று 2019-இல் மத்திய அரசு அறிவித்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக நகைக் கடை உரிமையாளா்கள் கேட்டுக் கொண்டதால் இந்த காலக்கெடு ஜூன் 15-ஆம் தேதி வரை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது: வீரேந்திர சச்தேவா

பாஜகவின் வெற்றிக்கு அதன் தொலைநோக்கு பாா்வைதான் காரணம்: பிரவீன் கண்டேல்வால்

ஆலந்தூரில் தவெக வேட்பாளா் ஹரிஸ் வெற்றி; அமைச்சா் அன்பரசன் தோல்வி
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்; அஸ்ஸாமில் மீண்டும் பாஜக!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


