ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோவேக்ஸின் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கப்படும்: மத்திய அரசு

கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி மே - ஜூன் மாதங்களில் இருமடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

News image
'கோவேக்ஸின் உற்பத்தி மே - ஜூனில் இருமடங்கு அதிகரிக்கப்படும்'
Updated On :12 மே 2021, 12:19 pm

DIN

கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி மே - ஜூன் மாதங்களில் இருமடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

மேலும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 6 முதல் 7 மடங்கு அவரை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசியை மத்திய அரசு விநியோகம் செய்து வருகிறது.

எனினும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அடுத்த மாதத்திற்குள் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 6 முதல் 7 மடங்கு வரை கோவேக்ஸின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதால், செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 10 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.