டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கரோனா தடுப்பூசி இறக்குமதி: மு.க.ஸ்டாலின்
உலகளாவிய டெண்டர் மூலம் கரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த போதிய அளவு தடுப்பூசி இல்லாததால், தடுப்பூசி இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மத்திய அரசு வழங்கும் கரோனா தடுப்பூசி, 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு போடுவதற்கு போதுமானதாக இல்லை.
தமிழகத்திற்கு மத்திய அரசால் ஆக்ஸிஜன் அளவு உயர்த்தப்பட்டாலும், தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் போதிய அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்கவும், பிற மாநிலங்களில் ஆக்ஸிஜன் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக ஆக்ஸிஜன் விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி இறக்குமதி முழு விபரம்: இங்கே கிளிக் செய்யவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...