மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

'கருப்புப் பூஞ்சை': கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

கருப்புப்  பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :20 மே 2021, 11:34 am

DIN

கருப்புப்  பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இஎன்டி மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்களைப் பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், ஆம்போடெரிசின் பி (Amphotericin B) என்ற மருந்தை கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோய் பட்டியலில் சேர்க்கலாம் என்றும், பூஞ்சை நோயை கொள்ளை நோயாக அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மியூகோமைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை. இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே இந்த கருப்புப் பூஞ்சை தாக்கி வருகிறது. 

ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்றுநோயாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.