திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

உலக நீரிழிவு நாள்: 12 பேரில் ஒருவருக்கு நீரிழிவு; உலகளவில் இந்தியா இரண்டாமிடம்

நாட்டில் 12 பெரியவர்களில் ஒருவருக்கு அல்லது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7.40 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதித்திருப்பதாகக் சர்வதேச நீரிழிவு முகமை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள

News image
12 பேரில் ஒருவருக்கு நீரிழிவு; உலகளவில் இந்தியா இரண்டாமிடம்
Updated On :7 பிப்ரவரி 2024, 10:08 am

IANS


பெங்களூரு: நாட்டில் 12 பெரியவர்களில் ஒருவருக்கு அல்லது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7.40 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதித்திருப்பதாகக் சர்வதேச நீரிழிவு முகமை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நீரிழிவு நாள் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகிலேயே அதிக 14.1 கோடி நீரிழிவு நோயாளிகளுடன் சீனா முதலிடத்திலும், இந்தியா 7.40 கோடி நீரிழிவு நோயாளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

4 கோடி பெரியவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்புத் தன்மை குறைவாக இருப்பதும், இவர்கள் இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகும் அதிக அபாயம் இருப்பதும், நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோர் (53.1 சதவீதம்)  நீரிழிவுடன் அல்லது நீரிழிவு பாதிப்பு அறியப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நீரிழிவு பாதிப்பு அதிகரிப்பது, நாட்டில் சுகாதாரத் துறையின் சிக்கல்களை அதிகரிப்பதாகவும், தனிநபர்கள் மற்றும் குடும்பத்தின் நலனை பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் தற்போது 53.7 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புள்ளிவிவரம் கடைசியாக எடுக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்குப் பின் இது 16 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2030ஆம் ஆண்டில் 64.3 கோடியாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் எடுத்துக் கொண்டால் 10.5 பேரில் ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.