நாடாளுமன்ற விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போதாவது பங்கேற்பாரா என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
82-வது அகில இந்திய பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் புதன்கிழமை காணொலி மூலம் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான விவாதங்களுக்கென சட்டப்பேரவைகளில் தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.
இதையும் படிக்க | ஒரே நாடு; ஒரே பேரவை நடைமுறை: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான விவாதங்களின் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தியிருப்பதைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. இதற்கெனப் பிரத்யேகமாக நேரம் ஒதுக்குவது குறித்தும் அவர் பரிந்துரை வைத்துள்ளார்.
ஆனால், பிரதமர் எப்போதாவது நாடாளுமன்ற விவாதங்களில் பங்கெடுப்பாரா என்பதுதான் கேள்வியாக உள்ளது."