இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டெல்டா கரோனாவுக்கு எந்தத் தடுப்பூசி சிறந்தது?: எய்ம்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு

டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி பாதிப்பிற்கு கோவேக்சின் தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:32 am

DIN

டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி பாதிப்பிற்கு கோவேக்சின் தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் தீநுண்மி பரவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள நிலையில், கோவேக்சின் தடுப்பூசி டெல்டா பிளஸ் தீநுண்மிக்கு எதிராக 50 சதவிகிதம் பலனளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்டா வகை கரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மற்ற வகைகளைக் காட்டிலும் 30 முதல் 70 சதவீதம் வரை வேகமாகப் பரவுவது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்கும் டெல்டா கரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி பாதிப்பிற்கு கோவேக்சின் தடுப்பூசி 50 சதவிகிதம் பலனளிப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையின்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,714 பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 14 நாள்களுக்குப் பிறகுஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 1,617 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. எஞ்சிய 1,097 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கோவேக்சின் தடுப்பூசி 50 சதவிகிதம் வரை பலனளிப்பதி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.