இந்தியாவில் வருகிற டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை தொடங்க இருப்பதாக விமானப் போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.
கரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானச் சேவைகள் தற்போது துபை போன்ற அண்டை நாடுகளுக்கும் , கரோனா தடுப்பு நெறிகளுடன் அனுமதிக்கும் நாடுகளுக்கும் மட்டுமே இருந்த நிலையில் மீண்டும் பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல விமானச் சேவையை வருகிற டிச.15 ஆம் தேதி தொடங்க இருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கரோனா தொற்றின் அடிப்படையில் 3 வகையாக வெளிநாடுகளைப் பிரித்து சில கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார்கள்.