கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காஷ்மீரில் வெளியூர் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்: பாஜக எம்எல்ஏ

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் ஞானு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:24 am

DIN


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் ஞானு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாள்களாக வெளியூரைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனர். குல்கம் மாவட்டத்தில் வெளியூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூன்று பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் பிகாரைச் சேர்ந்தவர்கள் என சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை பிகாரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பயம் கலந்த சூழல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள வெளியூரைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் ஞானு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"காஷ்மீரில் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்கள் வழங்க வேண்டும். அதன்மூலம், அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொண்டு, பயங்கரவாதிகளுக்குப் பாடம் புகட்டுவார்கள். பஞ்சாபில் பயங்கரவாதம் பரவலாக இருந்தபோது ஏகே-47 ரக துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள மக்களுக்கு உரிமம் வழங்கப்பட்டன. 

ஜம்மு-காஷ்மீரில் வசிக்கு்ம மக்களுக்கும் இதைச் செய்ய வேண்டும். வெளியூரைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து அவர்களைக் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்க வைத்து வேலைவாய்ப்பைத் தவிர்த்து தனிப்பட்ட பாதுகாப்பும், அரசுப் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

ஏழை மக்களைக் குறி வைத்து தாக்கி பயங்கரவாத சூழலை உருவாக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் கோழைகள். நமது எல்லைப் பாதுகாப்புப் படையுடனோ அல்லது ராணுவத்துடனோ சண்டைபோட அவர்களுக்குத் தைரியம் உள்ளதா? பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தானால் ஈர்க்கப்பட்டு அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொண்டிருப்பவர்கள்தான் மக்களைக் கொல்கின்றனர்" என்றார் ஞானேந்திர சிங் ஞானு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.