ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘40% பெண்களுக்கு வாய்ப்பு என பிரியங்கா காந்தி அறிவித்திருப்பது அரசியல் நாடகம்’: மாயாவதி

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டப்பேரவை இடங்களில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளது அரசியல் நாடகம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

News image
‘40% பெண்களுக்கு வாய்ப்பு என பிரியங்கா காந்தி அறிவித்திருப்பது அரசியல் நாடகம்’: மாயாவதி
Updated On :19 அக்டோபர் 2021, 2:59 pm

DIN

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டப்பேரவை இடங்களில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளது அரசியல் நாடகம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன.

இதையும் படிக்க | 

குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெற்றி பெற பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,  “உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீதத்தை பெண்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | 

இந்நிலையில் பிரியங்கா காந்தியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, “ஆட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தலித், பெண்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களைக் குறித்து கவலைப்படுவதில்லை” என விமரிசித்துள்ளார்.

மேலும், “தற்போது பெண்களுக்கு 40 சதவிகிதம் வாய்ப்பளிக்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்திருப்பது அரசியல் நாடகத்தைத் தவிர வேறு எதுவுமில்லை” என மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.