ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெட்ரோல் விலை ரூ. 200-ஐத் தொட்டால் பைக்கில் 3 பேர் செல்லலாம்: அசாம் பாஜக தலைவர்

அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2021, 12:28 pm

DIN


அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாபேஷ் கலிடா கடந்த ஜூன் மாதம் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அசாம் ஊடகங்களில் வெளியான தகவலின்படி ஒரு நிகழ்ச்சியில் பெட்ரோல், டீசல் விலை குறித்து அவர் பேசியது:

"அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால் இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும். எனினும், அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும்."

அசாம் மாநில காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பாபீடா சர்மா இதுபற்றி கூறுகையில், "பாஜக மாநிலத் தலைவர் எந்தக் காரணத்துக்காக இதைக் கூறியிருந்தாலும், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொது மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களின் தீவிரத்தை உணராமல் அவமதிக்கும் வகையில் இருப்பதையே அவரது பேச்சு வெளிக்காட்டுகிறது" என்றார்.  

குவாஹட்டியில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.80-க்கும், டீசல் விலை ரூ. 94.27-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.