வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லி: விவசாயிகள் போராடும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

News image
தில்லி: விவசாயிகள் போராடும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்
Updated On :29 அக்டோபர் 2021, 5:29 am

DIN

தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்தும் விவசாயிகள் தலைநகர் தில்லிக்குள் செல்லாமல் இருப்பதற்காக காவல்துறை தரப்பில் நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தில்லி - உத்தரப்பிரதேசம் எல்லையான காசிப்பூர் மற்றும் தில்லி - ஹரியாணா எல்லையான திக்ரி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி நெடுஞ்சாலை 9 மற்றும் 24-ல் முழுமையாக பொதுமக்களின் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.