தில்லியில் நான்கு வயது குழந்தையை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக வெளியாகியச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி பாபா நகர் பகுதியில் நான்கு வயது குழந்தையை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகே உள்ள வீட்டின் வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பு, "இனிப்பு வழங்குவதாகக் கூறி வீட்டிற்குள் அழைத்து குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்" என தெரிவித்தது.
வீட்டிற்கு சென்ற பிறகு இச்சம்பவம் குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செயயப்பட்டதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


