தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அயோத்தி: நூறாண்டு பழமைவாய்ந்த கோயிலிலிருந்து 8 சிலைகள் திருட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள  நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலில் 8 பழங்காலச் சிலைகள் திருடிப்போயுள்ளன.

News image

கோப்பிலிருந்து

Updated On :23 செப்டம்பர் 2021, 10:00 am


அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள  நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலில் 8 பழங்காலச் சிலைகள் திருடிப்போயுள்ளன.

கோயிலிலிருந்த 8 சிலைகள் காணாமல் போனது குறித்து புதன்கிழமை தெரிய வந்ததைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சைலேஷ் குமார் பாண்டே கூறுகையில், கோயிலிலிருந்து திருடுப் போன சிலைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் 9 சிலைகள் திருடுப்போனதாக நம்பப்பட்டது. பிறகு, ஒரு சிலை மட்டும் கோயில் வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறோம் என்றார்.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்த பூசாரி, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயில் சிலைகள் திருடிப்போயிருந்ததைப் பார்த்து தகவல் கொடுத்தள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.