தலித் ஒருவர் மாநில முதல்வரானதை சித்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஆம் ஆத்மி கட்சி விமரிசித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட நிலையில் அவருடனான மோதல் காரணமாக தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நவ்ஜோத் சிங் சித்து முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரண்ஜீத் சன்னி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ், “நவ்ஜோத் சிங் சித்து தலித் மக்களுக்கு எதிரானவர் என இதன்மூலம் தெரியவருகிறது. தலித் ஒருவர் முதல்வராக பதவியேற்றதை சித்துவால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் போனது வருத்தமானது” என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

இணை முன்னிலையில் திவ்யா, வைஷாலி- பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு

சட்டப்பேரவைத் தோ்தல்: 4 நாட்கள் மதுக்கடைக்கு விடுமுறை

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


