ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வங்கதேசம், இலங்கைக்கு அதிக கோதுமை ஏற்றுமதி: மாநிலங்களவையில் தகவல்

கடந்த நிதியாண்டில் மாா்ச் 21 வரை இந்தியா 70.30 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது.

Updated On :1 ஏப்ரல் 2022, 5:46 pm

கடந்த நிதியாண்டில் மாா்ச் 21 வரை இந்தியா 70.30 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது. இதில், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அதிகஅளவில் கொள்முதல் செய்துள்ளன என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

2021-22 நிதியாண்டில் மாா்ச் 21 வரை 70.30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை நமது நாடு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக வங்கதேசத்துக்கு 39.37 லட்சம் டன், இலங்கைக்கு 5.80 லட்சம் டன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 4.69 லட்சம் டன் ஏற்றுமதியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து கடல் உணவுகள் ஏற்றுமதியாவதும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 7.16 மில்லியன் டாலா் மதிப்பிலான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளோம். இந்தியாவில் பயன்படுத்தப்படும் மீன் பிடிவலைகள், கடல் ஆமைகளைப் பாதிப்பதாகக் கூறி இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஒரு வகை இறாலுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

தெற்காசிய நாடுகளுடனான இந்தியாவின் வா்த்தகம் கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை இந்தியா தொடா்ந்து பின்பற்றி வருகிறது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் (ஸ்டாா்ட்-அப்) எண்ணிக்கை கடந்த 2016-17-இல் 726-ஆக இருந்தது. 2021-22-இல் அந்த எண்ணிக்கை 66,810-ஆக அதிகரித்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.